புது ஹீரோக்களுடன் டூயட் பாட ரெடி: கவலையில் காஜல்

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் இவர் அறிமுகமான பொம்மலாட்டம் திரைப்படம் முதல் சமீபத்தில் அஜித் நடித்து வெளிவந்த விவேகம் படம் வரை இவரின் வளர்ச்சி மற்ற நடிகைகளை கடுப்பில் ஆழ்த்தியது.

விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இவர் ஜோடி போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த இவர் ஹிந்தியில் வெளியான குயின் திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் நடித்து வருகிறார். "பாரிஸ் பாரிஸ்" என்ற தமிழ் தலைப்புடன் தயாராகிவரும் இந்த புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் இன்னும் துவங்கவில்லை.

இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தார் காஜல். ஆனால் படப்பிடிப்பு இப்படி பாதியிலே நின்றதால் காஜல் குழப்பத்தில் உள்ளார். இதைத்தவிர, வேறு எந்த படமும் காஜலின் கை வசமில்லை. டாப் ஹீரோக்களும் காஜலை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிரடி முடிவாக காஜல் இனி புதிய ஹீரோக்களுடன் டூயட் பாட தயாராக உள்ளதாக தூது அனுப்பியுள்ளார்.

எப்படியும் புதிய ஹீரோக்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளுடன் வலம் வருகிறார் காஜல்..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>