ஜடேஜா மனைவி மீது போலீஸ் தாக்குதல்: கைக்குழந்தையுடன் படுகாயம்!

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி மீது போலீஸ்காரர் ஒருவர் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா. இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியை மும்பையில் சந்திக்கிறது.

இந்த சூழலில் இன்று காலை தனது கைக்குழந்தையுடன் குஜராத்தில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார் ஜடேஜா மனைவி ரிவா சோலாங்கி. குஜராத்தின் முக்கிய சாலை ஒன்றில் காரில் பயணிக்கும் போது முன்னே சென்று கொண்டிருந்த டூ-வீலர் மீது தவறுதலாக மோதியுள்ளார் ரிவா.

அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் ஒரு போலீஸ் அதிகாரி. அதனாலோ என்னவோ, மன்னிப்புக் கேட்க காரைவிட்டு கீழே இறங்கி வந்த ரிவாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார் அந்த போலீஸ் அதிகாரி. கைக்குழந்தையுடன் படுகாயமடைந்த ரிவாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எதையும் விசாரிக்காமல், உடனடியாகத் தாக்குதலில் ஈடுபட்ட அந்த போலீஸ் அதிகாரியின் மீது ரிவா புகார் அளித்துள்ளார். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>