தமிழகத்தில் நாளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் சுமார் 3608 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து ஆயிரத்து 96 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 9.30 மணியளவில் பத்தாம் வகுப்பு பொதுச் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை, www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் காணலாம்.

இதைதவிர, அனைத்து பள்ளிகளுக்கும் இணைய முகவரில் தேர்வு முடிவுகள் அனுப்பு வைக்கப்படுகிறத. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான 5 நிமிடங்களில் மாணவ மாணவியரின் பெற்றோர் செல்போன் எண்ணிற்கு முடிவுகள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த மாணவர்களின் தேர்வு முடிவு பகுப்பாய்வு அறிக்கையை மேற்கண்ட இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>