மிர்ச்சி சிவா நடித்த ldquoதமிழ் படம்rdquo இரண்டாம் பாகம் தொடங்கியது

வெற்றி பெற்ற பல்வேறு படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாகி இருக்கிறது.

மிர்ச்சி சிவா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது.

அதன் அடுத்த பாகமாக ‘தமிழ்படம் 2.0’என்ற பெயரில் தமிழ் படத்தின் பூஜை நேற்று நடந்தது. இப்படத்தை ‘விக்ரம் வேதா’ படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார்.

முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவே இந்த பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே , சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார்.

 

More News >>