அது அந்நிய அரசின் படையெடுப்பு!- வைகோ ஆவேசம்

”மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பினார் அது அந்நிய அரசின் படையெடுப்பாகவே கருதப்படும்” என வைகோ ஆவேசமடைந்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் கடந்த நூறு நாள்களாக விடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தூத்துக்குடியில் போராடும் மக்களை ஒடுக்க தமிழகக் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இதில் 10 பேர் பலியாகினார். பலர் காயமடைந்தனர். போராட்டத்தைக் கலவரமாக அறிவித்த அரசு தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விதித்துள்ளது. இதன் பின்னரும் மக்கள் போராட்டம் ஓயவில்லை.

தொடர்ந்து தூத்துக்குடியிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் இன்று தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடில் போலீஸ் ஈடுபட்டது. இதில் இன்று இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

12 அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது மட்டுமல்லாமல், தூத்துக்குடியில் அமைதி திரும்ப மத்திய துணை ராணுவத்தை அனுப்பவும் தயார் என அறிவித்துள்ளது மத்திய அரசு.

இதுகுறித்து இன்று தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த ம.தி.மு.க-வின் வைகோ, “தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தை அனுப்ப தயார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது எக்காரணத்தை கொண்டும் துணை ராணுவத்தை தமிழகத்திற்கு அனுப்பக் கூடாது. துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்புமானால் அது அந்நிய அரசின் படையெடுப்பாகவே கருதப்படும்” என ஆவேசமடைந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>