தூத்துக்குடி பதற்றம் எதிரொலி:டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் நாளை நடைபெற்ற இருந்த டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 வது நாளில் நடைபெற்ற போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. இதில், போலிசார் நடத்திய அதிரடி துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து, தூத்துக்குடியில் வரும் 25 தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி துறை தேர்வு நாளை நடைபெற இருந்த நிலையில், தூத்துக்குடி விவகாரத்தினால் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதேபோல், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகளும், நடைபெற இருந்தது. ஆனால், கலவர சூழலை அடுத்து இரண்டு தேர்வுகளின் தேதிகள் ஒத்திவைவக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>