தீர்ந்தது சர்ச்சை:கவுண்டி தொடரிலிருந்து விராட் விலகினார்!

இங்கிலாந்தின் கவுண்டி தொடரிலிருந்து விலகியுள்ளார் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி.

இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியிருந்தார்.

இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே ஜூன் மாதத்தில்தான் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து கவுண்டி தொடர், கோலி ஜூன் மாதம் முழுவதும் எங்களுக்குத்தான் என அறிவித்துள்ளபோது, அதே ’ஜூன் மாதத்தில் வரும் அயர்லாந்து தொடரில் கேப்டன் கோலி இந்தியாவுக்காக எப்படி விளையாடுவார்?’ என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரையில் கோலி தரப்பிலிருந்தோ பிசிசிஐ தரப்பிலிருந்தோ தரப்படவில்லை. இந்நிலையில் தற்போது காயம் காரணமாக கவுண்டி தொடரில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

எது எப்படியோ, கோலி- கவுண்டி தொடர் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>