நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் வெளியீடு

நாடு முழுவதும் சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் இன்று வெளிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், மருத்துவப் படிப்பில் சேருவதற்காக மாணவர்களுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மே 6ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் இன்று காலை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது.

மேலும், விடைத்தாள்களுடன், கேள்விக்கான பதில்களும் (கீ ஆன்சர்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை இதன்மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம். அப்படி அதில், ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் ரூ.1000 கட்சி சிபிஎஸ்இக்கு முறையீடலாம்.

இந்த விடைத்தாள் மற்றும் கீ ஆன்சரை வரும் 27ம் தேதி மாலை 5 மணி வரையில் மட்டுமே இணையதளத்தில் பார்க்க முடியும் என்றும், வரும் 5ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>