முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் தொடக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவையை நெல்லை, கன்னியாகுமரியில் மட்டும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, இணையதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவி மக்களை பீதியடைய வைத்தது. இதனால், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணைய சேவை முடக்கி வைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முடக்கி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

இருப்பினும், தூத்துக்குடியில் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாததால், இங்கு மட்டும் இணையச் சேவைக்கான தடை நீக்கப்படவில்லை.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>