ஏன் இந்த கொலை வெறி.. அமெரிக்காவில் தொடரும் சம்பவங்கள்!

அமெரிக்காவில் ஒக்லஹாமா நகரில் உணவகம் ஒன்றில் நுழைந்த மனிதன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமுற்றனர்.

ஒக்லஹாமாவில் ஹெப்னர் ஏரிக்கு கிழக்குப் பக்கம் லூயிஸ் கிரில் & பார் என்ற உணவகம் உள்ளது. வியாழன் மாலை 6:30 மணியளவில் இங்கு வந்தவன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளான்.

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த ஒரு பெண், அவரது மகள் உள்ளிட்ட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றனர். தாக்குதல் நடத்தியவனை உணவகத்தின் வெளியே நின்றிருந்த ஒருவர் தாம் வைத்திருந்த பிஸ்டலால் சுட்டார்.

அதில் அவன் மரணமடைந்தான். சுட்டவன் யாரென்றும் ஏன் அப்படி நடந்துகொண்டான் என்ற காரணமும் இன்னமும் தெரியவில்லை என்று ஒக்லஹாமா காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>