நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம்.. வாடிக்கையாளர்களே உஷார்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9 சங்கங்களை சேர்ந்த வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு, இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் அரசின் மெத்தனப்போக்கு உள்ளிட்டவை கண்டித்து நாடு முழுவதும் வரும் 30, 31ம் தேதிகளில் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஐக்கிய கூட்டமைப்பின் இமாச்சலப் பிரதேசம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம் வர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்திய வங்கிகள் சங்கத்தால் 2 சதவீத சம்பள உயர்வும், அதுவும் சில வங்கிகளில் மூன்றாம் படிநிலை பணியாளர்கள் வரைதான் அளிக்கப்படுகிறது. இதை கண்டித்தும் எங்கள் அமைப்புக்கு உள்பட 9 சங்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>