வெற்றி வாகையுடன் சென்னை திரும்பும் சென்னை சூப்பர் கிங்க்ஸ்..!

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணி, வெற்றி வாகையுடன் இன்று மாலை சென்னைக்கு வருகிறது. இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு, 2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் அடி எடுத்து வைத்தது. இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர்.மாசுடன் களமறிங்கிய சிஎஸ்கே விளையாடிய போட்டிகளில் வெற்றிப்பெற்று அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறியது.

ஐபிஎல் மொத்த தொடரில் 7வது முறையாக, சிஎஸ்கே பைனல்சுக்கு முன்னேறியது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய சிஎஸ்கே வெற்றிப்பெற வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. வாட்சன் செஞ்சுரியையும் தாண்டி விளையாடி, சிஎஸ்கேவை எளிதாக வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. சிஎஸ்கேவின் வெற்றியால் நள்ளிரவில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில், வெற்றி வாகையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மாலை 4 மணியளவில் மும்பையில் இருந்து சென்னை திரும்புகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>