இனி உச்சத்தை தொடுவேன்- டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா!

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டிகளில், பல பதக்கங்களை அள்ளி இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டேபில் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா.

இன்னும் பல உச்சங்களைத் தொடப் போகும் இந்த நட்சத்திரம் தொடர் வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்து உள்ளார். காமன்வெல்த் போட்டிகளின் போது, டெபில் டென்னிஸ் விளையாட்டின் நான்கு வித போட்டிகளில் பங்கேற்றார் பத்ரா.

பங்கேற்ற நான்கு விதப் போட்டிகளிலும் பதக்கம் வென்றார். மேலும், சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய டெபில் டென்னிஸ் அணியிலும் அங்கம் வகித்தார். இந்த காமன்வெல்த் போட்டியின் போது, உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கும் ஃபெங் தியான்வெய்யை இரண்டு முறை தோற்கடித்து சாதனை படைத்தார்.

22 வயதே நிரம்பியுள்ள பத்ரா, காமன்வெல் போட்டிகளுடன் தன் இலக்கினை சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. தன் அடுத்ததடுத்த திட்டங்கள் குறித்து பகிர்ந்த பத்ரா, `காமன்வெல் போட்டிகளில் வெற்றி பெற்றதோடு என் இலக்கு முடிந்து விடாது. அடுத்தடுத்து சாதிக்க துடிப்புடன் இருக்கிறேன். ஆனால், என் ஃபிட்னஸ் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு இன்னும் கடுமையாக உழைப்பேன்' என்றார் நம்பிக்கையுடன்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>