ஏர் இந்தியாவை யாரும் வாங்காததால் மத்திய அரசே இனி நடத்துமாம்!

கடனில் சிக்கித் தவித்து வந்த ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தை யாருமே வாங்க முன்வராததால் இனி மத்திய அரசே அதைத் தொடர்ந்து நடத்த முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் உள்ளது. இந்தியாவின் பழம்பெரும் விமான நிறுவனமான ‘ஏர் இந்தியா’ சமீப காலமாக பெரும் கடன் தொல்லைகளால் சிக்கலில் இருந்து வந்தது.

இந்நிலையி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், இதைத் தவிர்க்க நிறுவனத்தை தனியார் மயம் ஒப்படைக்கலாம் என்ற முடிவை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ‘ஏர் இந்தியா’ விமான நிறுவன ஊழியர்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், எழுந்த பல பிரச்னைகளையும் சமாளித்து ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாரிடன் விற்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில் மே-17ம் தேதி விற்பனையில் பங்குகளை ஏலம் எடுக்க நினைக்கு தனியார்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் தேர்வு செய்ய்ப்படும் நிறுவனங்களின் பெயர்கள் ஜூன் 15-ம் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசின் விதிமுறைகளும் ஏர் இந்தியாவை வாங்க வேண்டியதற்கான கட்டுப்பாடுகளும் ஒத்துவராமல் இருப்பதால் ஏர் இந்தியாவை வாங்க தனியார்கள் யாருமே முன்வரவில்லை. இதையடுத்து, யாரும் விண்ணப்பிக்காததால் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசே தொடர்ந்து நடத்தும் என விமானப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>