பயங்கரவாதம் தலைதூக்க தமிழக அரசு அனுமதிக்காது- அமைச்சர் ஜெயக்குமார்

”பயங்கரவாதத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி நடந்த மாபெரும் போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்? தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரணை ஆணையம் கண்டறியும் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம். வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்பர்கள். அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தான் அரசு செயல்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>