ஆர்.கே.நகருக்கு புதிய தேர்தல் அதிகாரி: பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ் நியமனம்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றி புதிய அதிகாரியாக பிரவீன் நாயரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரன் உள்பட 58 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்தார். இதையடுத்து தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என திமுக, பாஜக உள்பட பல்வேறு முக்கிய கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் அலுவலராக செயல்பட்டு வந்த வேலுச்சாமியை மாற்றி புதிய அதிகாரியாக பிரவீன் நாயர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முறையும் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>