ஸ்டெர்லைட்... ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்த விவகாரம் குறித்து ஒரு நாளல்ல ஓராண்டு கூட விவாதிக்க தயார் என ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது குறித்து சட்டப்பேரவையில் ஒரு நாள் முழுவதும் விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதலமைச்சருக்கு சவால் விடுத்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது குறித்து ஒரு நாளல்ல ஓராண்டு கூடிய விவாதிக்க தயார் என பதிலளித்துள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மடியில் கனமிருப்பதால் வழியில் பயமிருப்பதாக அவர் விமர்சித்தார்.

காவிரி, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் திமுக தான் எனக் குற்றம்சாட்டிய அவர், மக்களுக்கு உண்மை தெரிந்துவிடும் என்பதாலேயே திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவை நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>