பெட்ரோல், டீசல் தொடர்ந்து சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

பெட்ரோ, டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பொது மக்களுக்கு கூடுதல் சுமையாக தற்போது சிலிண்டர் விலையையும் உயர்த்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கே, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், நம் அன்றாட சமையலுக்கு தேவைப்படும் சமையல் சிலிண்டரின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூ.2.34ம், மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலையில் ரூ.48ம் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசலை தொடர்ந்து கேஸ் சிலிண்டரின் அதிரடி விலை உயர்வால், நடுத்தர குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>