சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தில் மோடி! மாணவர்களுடன் கலந்துரையாடல்

பிரதமர் மோடி நன்யாங் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தார்.

மோடியின் இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் கல்வி மற்றும் தொழில் சார்ந்த துறைகளை வலுப்படுத்த முடிவானது.

இதற்காக கூட்டு முயற்சியாக சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகத்துடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் மோடியின் பல்கலைக்கழக வருகையின் போது அவருக்குத் துணையாக சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் யே குங் உடன் வந்தார். மேலும் அவர் நன்யாங் பல்கலையில் நடந்த கண்காட்சியையும் அங்கு வைக்கப்பட்டிருந்த சமூக ரோபோவையும் பார்வையிட்ட பின்னர் மானவர்களிடம் அதுகுறித்த கலதுரையாடலில் ஈடுபட்டார்.

மேலும், அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் புதுமையின் தேவை எவ்வளவு என்பது குறித்து கலந்துரையாடினார்.

மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சிங்கப்பூருக்கு வருகை தந்தார். பல்கலைக்கழகத்தில் ‘புதுமையின் ஆசியாவுக்கான மாற்றம்’ என்ற தலைப்பில் அப்பல்கலையில் தலைமை பேராசிரியர் சுப்ரா சுரேஷ் உடனும் உடனிருந்த மாணவர்களுடனும் கலந்து உரையாடினார்.

அப்போது பேராசிரியர் சுரேஷ் கூறுகையில், “இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் அறிவு சார்ந்த பொருளாதார நிலைப்பாட்டைக் கொண்டவை. இந்த அறிவு அந்நாட்டின் மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்களின் வாயிலாகவே நாட்டைச் சேருகின்றன” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>