அமெரிக்காவில் பயங்கரம் - 9 மாத குழந்தையை கடித்துக் கொன்றது நாய்

பாட்டி வீட்டில் இருந்த 9 மாத பெண் குழந்தையை அவ்வீட்டில் வளர்த்த நாய் ஒன்று கடித்துக் கொன்றுள்ளது.

அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் மிராமர் என்ற பகுதி உள்ளது. இங்கு கிங்க்ஸ்டன் டிரைவ் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பிராண்டா வில்லஸின் (வயது 24), என்ற பெண், காலையில் வேலைக்குச் செல்லும்போது 9 மாத குழந்தையான தன் மகள் லியானா வாலினோவை பாட்டி வீட்டில் விட்டுச் செல்வது வழக்கம். சம்பவ தினத்தன்றும் குழந்தையின் அப்பாவுடைய அம்மாவான பாட்டியிடம் மகளை விட்டுவிட்டு பிராண்டா அலுவலகம் சென்றுள்ளார்.

காலை 11:30 மணியளவில் குழந்தை ஆபத்தாக இருப்பதாக உறவினர் ஒருவர் தொலைபேசியில் கூறியதை அடுத்து பிராண்டா விரைந்து வந்துள்ளார். அதற்குள் சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்திருந்தனர். அவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்ததை கேட்டு பிராண்டா அதிர்ச்சியடைந்தார்.

குழந்தையின் பாட்டி மூன்று நாய்களை வளர்த்து வந்துள்ளார். அதில் மூன்று வயதான ஆண் நாய் ஒன்று படுக்கையறையில் இருந்த குழந்தை லியானாவை கடித்துள்ளது. அதினால் குழந்தை லியானா வாலினா பரிதாபமாக உயிரிழந்தாள்.

மூன்று நாய்களும் விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>