பிரபல சின்னத்திரை நடிகை விபச்சார வழக்கில் கைது

பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா, விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை அடுத்த பனையூரில் உள்ள தனியார் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாணி ராணி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை சங்கீதா உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்படி, சங்கீதா உள்பட 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சின்னத்திரை நடிகை சங்கீதா விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் வாணி ராணி சீரியல் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில நடிகைகள் சிக்குவார்கள் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>