ரஜினி குறித்த கேள்வி... கோபத்தில் கொதித்த சுப்பிரமணியன் சுவாமி!

அரசியல்வாதியான தம்மிடம், ரஜினியின் சினிமா டயலாக்கை சொல்லாதீர்கள் என சுப்பிரமணியன் சுவாமி காட்டம் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, தி.மு.கவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இல்லை என தெரிவித்தார்.

தூத்துக்குடி சம்பவத்திற்கு பயங்கரவாத சக்திகள்தான் காரணம் என்றும் அதற்கு சில அமைப்புகள் துணை நின்றதாகவும் குற்றம்சாட்டினார்.

ரஜினி பாஜக ஆதரவாளரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியின் சினிமா டயலாக்கை என்னிடம் சொல்லாதீர்கள், தாம் ஒரு அரசியல் வாதி என கோபம் அடைந்தார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>