ரூ.25 லட்சம் பணத்தை ஒப்படைத்த பிரபல ஓட்டல் ஊழியருக்கு குவியும் பாராட்டு

பிரபல சரவண பவன் ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் விட்டு சென்ற ரூ.25 லட்சம் பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூவில் பிரபல சரவண பவன் ஓட்டல்  உள்ளது. இங்கு, கடந்த மாதம் 31ம் தேதி சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்ட பிறகு அவர் எடுத்து வந்த பையை மறந்து விட்டு சென்றுவிட்டார்.

இதைக்கண்ட ஓட்டல் ஊழியர் ரவி என்பவர், பையை ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். பையை திறந்துபார்த்தபோது அதில், ரூ.25 லட்சம் இருந்தது தெரியவந்தது. பையின் உரிமையாளர் வந்து கேட்டால் கொடுத்துவிடலாம் என்று பத்திரமாக வைத்திருந்தனர்.ஆனால், அன்று இரவு வரை பணத்திற்கு உரிமை கோரி யாரும் வரவில்லை. பின்னர், மறுநாள் காலையில் ஓட்டல் மேலாளர் பாலு, பணியாளர் ரவி ஆகியோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்டைத்தனர்.

வாடிக்கையாளர் விட்டு சென்ற ரூ.25 லட்சம் அடங்கிய பணப்பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ரவி, மேலாளர் பாலு மற்றும் நிர்வாகத்தினரை அழைத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஷ்வநாகன் பாராட்டுகளை தெரிவித்து பரிசு வழங்கினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>