பானையா...அண்டாவா...குண்டாவா... கவிழ்ப்பதற்கு- ஜெயக்குமார் ஆவேசம்nbsp

கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு பானையோ, சட்டியோ அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக அரசு கவிழும் என ​ே​அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்த  அமைச்சர் ஜெயக்குமார், கவிழ்ப்பதற்கு அ.தி.மு.க அரசு சட்டியோ, பானையோ அல்ல என தெரிவித்தார். உறுதியான இந்த ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது என்றார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் எதிரி கட்சியான தி.மு.கவுடன் தினகரன் மிகவும் இணக்கமாக இருப்பதாக விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார், சுயநலம் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் நிலைக்காது என்று கூறினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>