சிம்பு விரக்தியில் பேசி வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிம்புவால் சர்ச்சைகள் கசிந்து வருகிறது. சுய பிரச்னையால் படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருகிறார் போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதனால், சிம்பு சமீபகாலமாக வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடம் அவ்வப்போது பேசி வருகிறார். இதுபோன்று, சிம்பு உணர்ச்சிவசப்பட்டு பேசி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை ஏன் இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார் என்று குழம்பி உள்ளனர்.

அந்த வீடியோவில், “நான் என் தொழிலை மதிப்பதில்லை என பலர் நினைக்கின்றனர். அது உண்மையில்லை. நான் சினிமாவை நேசிக்கிறேன். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் ரஜினியாக மாற முயற்சி செய்கிறேன் என கூறுகின்றனர். நான் அவரைப் போல மாற முயற்சிக்கிறேன் என்பதே உண்மை. இது பலருக்கும் புரியவில்லை.என்னால், ரோபோ போல் வேலை செய்ய முடியாது. அதனால்தான் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவதாக என் மீது புகார் வருகிறது. சிறு வயதிலிருந்தே பழகிவிட்டேன். அதை மாற்ற முயற்சி செய்கிறேன்.

நாளை இருப்பேனா ? சினிமாவில் நடிப்பேனா ? என எனக்குத் தெரியாது. ரசிகர்களின் அன்பால்தான் என் சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியிவில்லை” என வீடியோவில் பேசியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>