உத்தரப் பிரதேசத்தில் டிராக்டர்லாரி மோதி பயங்கர விபத்து: 10 பேர் பலி

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கர்வா கிராமத்தை சேர்ந்த நபர்கள் அருகில் உள்ள கோவில் பண்டிகைக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென எதிரே வந்த லாரி டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் இருந்த 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கர்வா கிராமத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் இங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More News >>