எனக்கு எதுக்கு ஓய்வு: அடுத்த ஒலிம்பிக்குத் தயாராகும் மேரி கோம்

மேரி கோமிடம், `நீங்கள் எப்போது ஓய்வு குறித்து அறிவிக்க உள்ளீர்கள்?' என்று கேட்டதற்கு, `நான் இதுவரை எப்போதும் எனது ஓய்வு குறித்து பேசியதே இல்லை. அப்படி யாராவது என் ஓய்வு குறித்து பேசினால் அது வெறும் வதந்தி தான்" எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “என் ஓய்வு குறித்து மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது சில நேரங்களில் எனக்கே அதிர்ச்சி அளிக்கிறது. ஒலிம்பிக்கில் இதுவரை நான் தங்கம் வென்றதில்லை. அதை வெல்வது மட்டும் தான் தற்போதைக்கு எனது கனவாக இருந்து வருகிறது. அதை அடையும் வரை நான் விடப் போவதில்லை.

எனது வயது குறித்து சொல்லி,  ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை வயதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. என்னிடம் வாருங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்பதை காண்பிப்பேன். எனது உடல், எப்போது நிறுத்தச் சொல்லும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்போது தான் குத்துச்சண்டைக்கு ஓய்வு கொடுப்பேன்' என்று கூறியுள்ளார் விரவாக. 

மேரி கோம், கல்யாணமாகி மூன்று குழந்தைக்குத் தாயாக உள்ளார். ஒரு சொந்த ஜிம் வைத்துள்ளார். மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். இது மட்டுமல்லாமல், தொடர்ந்து இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டும் வருகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>