தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

நாடு முழுவதும் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. தமிழகம் பொறுத்தவரை, பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

அந்தவகையில், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதேபோல், சென்னையை பொறுத்தவரை, மாலை நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மற்ற நேரங்களில் வானம் கேம மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>