இலை இல்லை என்றால் மலர் இல்லை - தம்பிதுரை

தமிழகத்தில் இலை என்றால் மலரில்லை என இல.கணேசனுக்கு தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல கணேசன், "தாமரை இல்லை என்றால் இலை இல்லை, தாமரைக்கு கீழே தான் இரண்டு இலை இருக்கிறது என்பது சாமானியனுக்கும் தெரிந்த விஷயம்" என்றார்.

"சூரியன் மலர்ந்தால் தான் தாமரை மலரும் என்பது இயற்கை. அதனால் கூட்டணி என்று அர்த்தம் ஆகிவிடுமா?.இந்த ஆட்சி கலைந்துவிடும் என பலர் கனவு கண்டனர். ஆனால் பல இடையூறுகளை தாண்டி இதுவரை ஆட்சியை தக்கவைத்ததே சாதனை தான்" என்று இல.கணேசன் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் கேட்ட போது,"தமிழகத்தில் இலை இல்லை என்றால் மலர் இல்லை; இலையில் தான் மலர் இருக்கிறது" என இல.கணேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

More News >>