ஹோட்டல் ஊழியர்களைத் தாக்கிய அமைச்சரின் ஆதரவாளர்கள்!

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள பாருடன் கூடிய ஓர் உணவு விடுதியில் புகுந்து அமைச்சரின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஊழியர்களையும் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் அமைச்சர் எஸ்.ஏ. மகேஷின் ஆதரவாளர்கள் இந்த ரகளையில் ஈடுபட்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர்கள், உணவு விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பெற்ற காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>