நித்தியானந்தாவிடம் இருந்து மனைவியை மீட்டுக் கொடுங்கள்: கணவன் கதறல்

நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கும் தனது மனைவியை மீட்டுக் கொடுங்கள் என்று மாவட்ட கலெக்டரிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் வடுகம் முனிப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. விவசாயியான இவர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், 8 மாதங்களுக்கு முன்பு தனது மனைவி பெங்களூரில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்திற்குச் சென்றார்.

ஆனால், அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. மேலும், மனைவியின் பெயரில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறேன். உடனே தன் மனைவியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More News >>