பிரபல மலையாள நடிகைக்கு கொலை மிரட்டல்

நான் அவனில்லை -2, அரவான், உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா மேனன். தற்போது ஒரு படப்பிடிப்புக்காக மும்பை சென்றுள்ளார். இவரின் கைபேசிக்கு நேற்று ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. எதிர் முனையில் பேசியவர்கள் முதலில் ஸ்வேதா மேனனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  தொடர்ந்து புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஸ்வேதா மேனனை தரக்குறைவாக பேசியுள்ளனர். அது மட்டுமில்லாமல் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.   இதற்கு, ஸ்வேதா மேனன் மலையாள திரையுலகில் சங்க தேர்தலில் நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகவும் அதற்கான மனு சில நாட்கள் முன்பு தாக்கல் செய்துள்ளதே காரணமாக இவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.     ஸ்வேதா மேனன் பேட்டியில் கூறும்போது: நான் நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறேன் ஏற்கனவே பல நடிகைகள் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் புதிய நிர்வாக குழு உறுப்பினர் தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன் காரணமாக இந்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் நான் போட்டி போட மனு தாக்கல் செய்துள்ளேன். இதற்காக நான் யாருக்கும் பயப்படவில்லை என்றார்.
More News >>