உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் விதிமீறல்: குற்றஞ்சாட்டும் வைகோ!

உடலுறுப்பு மாற்று சிகிச்சைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார் ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ.

இதுகுறித்து ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம்நாட்டு நோயாளிகள் காத்திருக்கும்போது வெளிநாட்டு நோயாளிகளுக்கு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னுரிமை தருவதா? பணம் கொட்டிக்கிடக்கிறது என்பதற்காக வெளிநாட்டு நோயாளிகளுக்கு விதிமீறி உடலுறுப்பு மாற்றக்கூடாது

சென்னையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடக்கும் முறைகேடு பற்றி விசாரணை தேவை சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

More News >>