பிறை தெரியாததால் இன்று ரம்ஜான் இல்லை: பள்ளி விடுமுறையும் ரத்து

தமிழகத்தில் நேற்று பிறை தெரியாததால் ரம்ஜாம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று அறவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று மாலை பிறை தெரியாததால், இன்று கொண்டாடப்பட இருந்த ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

இதனால், இன்று அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>