பேருந்துக்குள் மழை... குடை பிடித்த நடத்துநர்!

கர்நாடகா மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநருக்கு நடத்துநர் குடை பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. ஹூப்ளி நகரில் பலத்த மழையிலும் அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டது.

பேருந்துக்குள் மழைநீர் வழியத் தொடங்கியது. குறிப்பாக பேருந்து ஓட்டுநர் அமர்ந்த இடத்தில் நீர் அதிகமாக ஒழுக தொடங்கியது. இதனால் பேருந்தை இயக்க முடியாமல் ஓட்டுநர் சிரமத்திற்கு ஆளானார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த நடத்துநர், ஓட்டுநருக்கு குடை பிடித்த பேருந்தை இயக்க உதவி செய்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More News >>