இதெல்லாம் ஒரு முதல்வருக்கு அழகா?- கடிந்துகொள்ளும் ஷீலா தீட்சித்

புது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில ஆளுநர் அனில் பைஜல் இல்லத்தில் காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா திக்‌ஷித் கடுகடுத்துள்ளார். கெஜ்ரிவால், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் 'ஸ்டிரைக்கில்' இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை மீண்டும் தங்கள் பணியை செய்ய வலியுறுத்துமாறு ஆளுநர் பைஜலிடம் சில நாட்களுக்கு முன்னர் வலியுறுத்தினார்.

இதற்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று கூறி கடந்த 6 நாட்களாக ஆளுநர் இல்லத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கெஜ்ரிவாலும் அவரது சட்டமன்ற சகாக்களும்.

இந்நிலையில் டெல்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஷீலா திக்‌ஷித், 'முதலாவதாக கெஜ்ரிவாலும் ஆளுநரும் எதற்காக சண்டை போடுகின்றனர் என்பதே எனக்குப் புரியவில்லை. டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

அப்படி மாநில அந்தஸ்து கொடுப்பதென்றால் அரசியல் சட்ட சாசனத்தையே திருத்த வேண்டும். ஆளுநரும் அவரும் பல கருத்துகளில் முரண்பட முழு உரிமை உள்ளது. அதை பேசித்தான் தீர்க்க வேண்டுமே தவிர, இப்படி தர்ணா போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' என்று கூறியுள்ளார்.

More News >>