காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்... காதலன் விபரீத முடிவு!

நிலக்கோட்டையில், காதலி வீட்டு முன் கத்தியால் குத்தி காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த சுரேஷ்குமார், டிப்ளமோ முடித்துவிட்டு டயர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் சமூக வலைதளத்தில் நட்பு ஏற்பட்டது.

நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. காதலியை கரம் பிடிக்க நினைத்த சுரேஷ்குமார், பெற்றோருடன் பெண் கேட்க சென்றுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர்.

இதனால் மனம் உடைந்த சுரேஷ்குமார், காதலி வீட்டின் முன் வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர், இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சுரேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சமூக வலைதளங்களால் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு தீமை இருக்கிறது என்பதற்கு நிலக்கோட்டை சம்பவம் ஒரு சிறிய உதாரணம்.

More News >>