உலகக்கோப்பை கால்பந்து: குரேஷியா அபார வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், அர்ஜெண்டினானை 3&0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரேஷியா அணி அபாரமாக வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷி அணிகள் மோதின.ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இருப்பினும், இதன் முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் குரேஷியா அணி வீரர்கள் ஆட்டம் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடினர். இந்த அணி வீரர்கள், அடுத்தடுத்து கோல் போட்டு வெற்றியை நோக்கி சென்றனர். அதன்படி, 53வது நிமிடத்தில் அண்டி ரெபிக் ஒரு கோலும், 80வது நிமிடத்தில் லூக்கா மாட்ரிக் ஒரு கோலும், 91வது நிமிடத்தில் இவான் ராகிடிக் ஒரு கோலும் அடித்தனர்.

இதன்மூலம், போட்டியின் இறுதியில் குரேஷியா அணி அர்ஜெண்டினா அணியை 3&0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றனர்.

More News >>