கமல் செல்லும் பாதை அவருக்கே தெரியவில்லை - ஜெயக்குமார்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் அரசியல் பாதை அவருக்கே தெரியவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கமல் தலைவர்களை சந்திப்பது விஷ்வரூபம் படம் ஒட வேண்டும் என்பதற்காக மட்டுமே." என்றார்.

“காவிரி தண்ணீர் உரிய நேரத்தில் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு சார்பில் போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக துரைமுருகனின் கேள்விக்கு யார் எந்த அமைச்சர் வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம்." என்றார் ஜெயக்குமார்

"துரைமுருகனுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே திமுகவில் அதிகார போட்டி உள்ளது.எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முடியும் என்ற ஸ்டாலின் கருத்து மூலம் அவரிடம் கறுப்பு பணம் இருப்பது தெளிவாகிறது" என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

More News >>