தம்பியின் திருமணத்தை முடித்தார் ஆர்யா!!!

நடிகர் ஆர்யாவின் தம்பியும் கதாநாயகனுமான சத்யா தனது நீண்ட கால தோழியைத் திருமணம் செய்துள்ளார்.

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய சுயம்வரம் போன்ற நிகழ்ச்சியில் மாப்பிள்ளையாகப் பெண் தேடியவர் நடிகர் ஆர்யா. இவர் அந்நிகழ்ச்சியின் முடிவில் எந்தப் பெண்ணையும் தேர்வு செய்யாது இருந்ததால் இவருக்கு இனி திருமணமே ந்டக்காது என்றே திரை உலகத்தினர் உட்பட ரசிகர்கள் வரையில் அனைவரும் பேசி வந்தனர்.

இந்த சூழலிலும் ஆர்யா, நடிகர் விஷாலுக்குத் திருமணம் முடிந்த பின்னரே தனக்குத் திருமணம் என்று விளக்கம் வேறு அளித்து வந்தார். இதனால், தன்னை விடுத்து முதலில் தன்னுடைய தம்பி சத்யாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் நடிகர் ஆர்யா.

’அமர காவியம்’ என்றதொரு படத்தில் நடித்திருந்த சத்யா தன் தோழி பாவனாவை இன்று திருமணம் செய்துள்ளார். இத்திருமணத்துக்கு திரை உலகத்தினர் உட்பட நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

More News >>