2024ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்: பிரபல ஜோதிடர் கணிப்பு

பிரபல ஜோதிடர் கியானேஷ்வர் பல கணிப்புகளை கூறி அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.

ஜோதிடர் கியானேஷ்வர் பிரபலங்களின் எதிர்கால நிகழ்வுகளை சரியாக கணித்து பிரபலமானவர். இவர் கூறிய பல்வேறு கணிப்புகள் நிஜத்தில் நடந்துள்ளன. குறிப்பாக, சிரஞ்ஜீவி, ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலுக்கு வருவார்கள் என்றார். இதேபோல், ஆந்திராவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும், முகேஷ் அம்பானி மகன் ஆகாஷ¨க்கு 2019ம் ஆண்டில் திருமணம் நடக்கும் என்றும் கணித்து கூறினார்.

ரஜினிகாந்த் வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்பார் என்றும், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆரத்யா அவரது பெயரை ரோகினி என்று மாற்றிக் கொண்டால் நிச்சயம் வருங்கால பிரதமர் ஆவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், 2024ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூளும் என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News >>