அரசியலுக்காகப் பயன்படுத்தப்படுகிறேன்?- ஆதாரம் வெளியிட்ட மல்லையா

பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியி நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து லண்டனில் பேசிய மல்லையா, ’2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி ஆகிய இருவருக்கும், எனது பிரச்னை குறித்து கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை.

பொதுத் துறை வங்கிகளுடன் எனக்கு நிலவி வரும் பிரச்னையை சரி செய்ய அனைத்து விதத்திலும் நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால், அரசியல் காரணங்களுக்காக நான் பயன்படுத்தப்பட்டால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது’ விளக்கம் அளித்துள்ளார்.

 

More News >>