அமெரிக்கா: இண்டியானாவில் விளையாடும்போது விபத்து - மாணவன் பலி

அமெரிக்காவில் இண்டியானா, கிரன்ஜர் பகுதியில் கூடைப்பந்து விளையாடியபோது கூடை மாட்டியிருந்த பலகையும் அதன் தாங்கி கம்பிகளும் உடைந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

நோலன் ஜெர்வெல்ஸ் என்ற 14 வயது பள்ளி மாணவன், தன் தங்கையுடன் செளத் பென்ட் என்ற இடத்தில் உள்ள உள்ளரங்கம் ஒன்றில் கூடைப்பந்து விளையாடியுள்ளான்.

அப்போது பந்தை போடுவதற்கான கூடையுடன் கூடிய பலகை, கம்பிகளுடன் சுவரிலிருந்து பெயர்ந்து அவன் மீது விழுந்துள்ளது. தலையில் காயம்பட்ட நோலன், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். அங்கு மருத்துவர்கள் அவன் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

விளையாட்டில் ஆர்வம் கொண்ட நோலன், இந்த கல்வியாண்டில் மிஷாவாகாவில் உள்ள மரியன் உயர்நிலைப்பள்ளி கூடைப்பந்து அணியில் இடம் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான் என்று அவனது தாயார் மார்க்கரெட் ஜெர்வெல்ஸ் கூறியுள்ளார்.

More News >>