பேராசிரியர் முகத்தில் மைப்பூசிய மாணவர்கள்!

குஜராத் மாநிலத்தில் பேராசிரியர் முகத்தில் மைப்பூசி, பல்கலைக் கழக வளாகத்திற்குள் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

குஜராத் மாநிலம் புஜ் நகரிலுள்ள கட்ச் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினர் குழு தேர்தல் அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில் பல்கலைக் கழகத்தில் அறிவியல் துறை தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஏபிவிபி மாணவ அமைப்பினர், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் முகத்தில் மைப்பூசி, ஊர்வலமாக அழைத்து சென்று அசிங்கப்படுத்தியோடு, அவரை அடிக்கவும் செய்தனர்.

மாணவ அமைப்பிடம் இருந்து சக ஆசிரியர்கள், பேராசிரியரை விடுவித்து அழைத்து வந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பல்கலைக் கழக துணைவேந்தர், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

கட்ச் பல்கலைக் கழக துணை வேந்தர், அளித்த புகாரின் அடிப்படையில் புஜ் நகர போலீஸார், எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>