மகப்பேறு விடுமுறை நீட்டிப்பு பெண்களுக்கு அபாயமா?

பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுமுறைக்கான காலத்தை நீட்டித்து மாற்றி அமைத்த மோடியின் திட்டம் தற்போது பெண்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது.

வேலை செய்யும் பெண்களுக்கான கூடுதல் வசதிக்காக மகப்பேறு விடுமுறைக்காலம் கொள்கையில் வரவேற்கத்தக்க திட்டத்தை பெண்களுக்கான முன்னணி நாடுகளான கனடா மற்றும் நார்வேக்குப் பின்னர் இந்தியா அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டம் தற்போது நல்ல பணியில் இருக்கும் பெண்கள் வேலை இழக்கும் அபாயமும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்துவதே கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

2018- 19 நிதியாண்டில் சர்வே ஆய்வின் அடிப்படையில் 1.1 மில்லியன் முதல் 1.8 மில்லியன் வரையிலான பெண்கள் சுமார் 10-க்கும் மேற்பட்ட துறைகளில் வேலை இழப்பர் எனக் கூறப்பட்டுள்ளது. இது வெறும் கணிப்பு தான் என்றும் உண்மை நிலவரத்தை ஆராய்ந்தால் அத்தனை துறைகளிலும் சுமார் 10 முதல் 12 மில்லியன் பெண்கள் நாடு முழுவதும் வேலை இழப்பர் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த வேலைப்பளுவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களின் பங்கு என்பது 36 சதவிகிதமாக இருந்தது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டோ இந்த நிலை வெறும் 24 சதவிகிதமாக வீழ்ந்தது. மெக்கென்சி நிறுவனத்தின் கணிப்பில் பெண்கள் அதிகளவில் பணியாற்றினால் நாட்டின் மொத்த உள்வருமானம் என்பது வருகிற 2015-ம் ஆண்டு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் எனத் தெரிவிக்கிறது.

 

More News >>