8 வழிச்சாலைகளை தொடர்ந்து 6 வழிச்சாலை: ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

சென்னை - சேலம் பசுமை 8 வழிச்சாலை அமைப்பதற்கு அம்மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 6 வழிச்சாலை விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை - சேலம் பசுமை 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைதொடர்ந்து, தமிழகத்தில் மதுரை - தஞ்சாவூர் இடையே மேலும் ஒரு 8 வழிச்சாலை அமைய உள்ளதாக சட்டமன்றத்தில் நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார்.இதன் பிறகு, திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே 6 வழி சாலை திட்டத்திற்கு நிலம் கைப்பற்றும் பணி நடந்து முடிந்துவிட்டது என்றும், சாலை போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாலை அமைக்க நிலம் கொடுப்பவர்களுக்கு புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

More News >>