குரல் பரிசோதனை- சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிர்மலா தேவி!

குரல் மாதிரி பரிசோதனைக்காக பேராசிரியை நிர்மலா தேவி பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்டார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிபிசிஐடி காவல் முடிந்தநிலையில், தற்போது நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டார். நிர்மலா தேவியின் குரல் மாதிரி பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி அனுமதி கோரியது.

நிர்மலா தேவியை 3 நாட்கள் சென்னை அழைத்து சென்று விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, பலத்த பாதுகாப்புடன் பேராசிரியை நிர்மலா தேவி சென்னை அழைத்து வரப்பட்டார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் அவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட உள்ளது. பின்னர் நிர்மலா தேவி மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட உள்ளார்.

More News >>