போதையில் தகராறு... காவலர் கை உடைப்பு!

சென்னையில், குடிபோதையில் காவலர் கையை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலை விவேகானந்தர் இல்லம் எதிரே மெரினா சர்விஸ் சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மெரினா கடற்கரையில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையில் உள்ள தடுப்புகளை அகற்ற கூறி தகாத வார்த்தைகள் பேசி, சண்டை போட்டு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனார்.

இதில் வேப்பேரி காவல்நிலைய முதல் நிலை காவலராக பணிபுரியும் மாரி கண்ணன் என்பவரின் கையை இரண்டு நபர்களும் சேர்ந்து உடைத்து விட்டனர். பின்னர் காவலரை இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் காவல்துறையினர் அவர்களை மெரினா காவல்நிலையம் அழைத்து சென்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மனோஜ் , விக்னேஷ் குமார் என்பதும் இவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

More News >>