ஸ்விஸ் கறுப்புப்பணத் தகவல்கள் விரைவில் வெளியாகும்!- பியுஷ் கோயல்

2019-ம் ஆண்டு ஸ்விஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப்பண வங்கிக் கணக்குகள் வெளிவந்துவிடும் என தற்காலிக நிதி அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மத்திய நிதி அமைச்சகத்தின் தற்காலிகப் பொறுப்பை அமைச்சர் பியூஸ் கோயல் ஏற்றுள்ளார். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பியுஷ் கோயல், ‘இந்தியாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, 2018 ஜனவரி 1 முதல் 2019 மார்ச் 31 ஆம் தேதி வரை, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியாவிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்தின் தரவுகள் சேமிக்கப்படும்.

இந்த காலகட்டத்தில் யாராவது சட்டத்துக்கு புறம்பாக டெபாசிட் செய்திருந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார். கோயலின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘2014 ஆம் ஆண்டு, அனைத்து கருப்புப் பணத்தையும் எடுத்து வந்து நாட்டில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்றார்.

2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு கருப்புப் பணப் பிரச்னையைத் தீர்க்கும் என்றார். 2018 ஆம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து இந்தியர்களின் டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறியவுடன், அவை அனைத்தும் வெள்ளைப் பணம் என்கிறார்’ என்று ட்விட்டர் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.

More News >>