நான் இன்னும் மாணவன் தான்- மு.க.ஸ்டாலின் பேச்சு

கரூர் மாவட்டத்தில் இன்று நடந்த திமுக மாணவரணி கூட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “எனக்கு வயது 65 ஆனாலும் இன்னும் நான் மாணவன்தான். மாணவர் அணியில் ஒருவராக இருந்து கடமையாற்ற வந்துள்ளேன். அறிவுரையாற்றவும் கட்டளையிடவும் வரவில்லை.

காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. கர்நாடக அரசின் புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

More News >>